கைத்தொலைபேசி சார்ஜ் செய்ய முயன்ற போது, மின் தாக்கி புங்குடுதீவு 10ஆம் வட்டார, ஒருவர் பலி!

Read Time:1 Minute, 47 Second

electy-01கைத்தொலைபேசிக்கு ‘சார்ஜ்’ செய்ய முற்பட்ட போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சோமலிங்கம் சண்முகநாதன் (வயது 32) என்பவரே உயிரிழந்தார்.

மேசன் வேலை செய்யும் சண்முகநாதன் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் தனது கைத்தொலைபேசியை சார்ஜில் போட எத்தனித்துள்ளார்.

எனினும் குறித்த ‘பிளக்கில்’ ஒரு வயர் கழன்று இருந்ததை அவர் கவனிக்கவில்லை. அதைக் கவனிக்காது வயரைக் கையால் பிடித்தபோதே மின்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் நின்றிந்த தரையும் ஈரமாக இருந்தது என்று கூறப்படுகின்றது.

மின்தாக்குதலுக்கு உள்ளான அவரை உடனடியாக அங்கு நின்ற ஏனையவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் மருத்துவர் பணியிலிருக்காது தனது வீட்டுக்குச் சென்று விட்டார் என்று உயிரிழந்தவரது உறவினர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி
Next post பேஸ்புக்கில் நிர்வாணப்படம்: யுவதி தற்கொலை முயற்சி