ஆபாசப்பட வீடியோவுக்காக மிருகங்கள், பறவைகளை சித்திரவதை செய்த அமெரிக்கப் பெண் கைது
ஆபாசப்பட வீடியோகளுக்காக குரூரமான முறையில் மிருகங்களையும் பறவைகளையும் சித்திரவதை செய்து கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான சாரா ஸமோரா எனும் பெண்ணே கடந்த வார இறுதியில் இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளார். மிருகங்கள், பறவைகளை கொடூரமான முறையில் கொன்றமை தொடர்பாக 8 குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவரின் விபரீத ஆபாச வீடியோ படப்பிடிப்புகளின்போது கோழிகள் மிகுந்த வலிகளை அனுபவித்துள்ளன என கைது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள அடம் ரெட்போர்ட் என்பவரின் வீட்டில் இந்த ஆபாச படப்படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு நன்னடத்தை கண்காணிப்பில் விடுவிக்கப்பட்டவர்.
மேற்படி வீடியோகளில் சாரா ஸமோராடன் மேலும் பல ஆபாசப்பட நடிகைகள், நடிகர்கள் தோன்றியுள்னர். இவர்கள் ஆபாச வீடியோக்களுக்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தருணத்திலேயே கோழிகளின் கழுத்தை கையால் நெரித்தும், காலால் மிதித்தும் கொல்லும் காட்சிகள், முயல்களை சுவரில் அடித்து கொல்லும் காட்சிகள் ஆகியன அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக இத்தகைய குரூரமான காட்சிகளை அவர்கள் படம்பிடித்தனராம்.
மிருக வதைக்கு எதிராக குரல்கொடுக்கும் அமைப்பினர் கொடுத்த தகவல் மூலம் பொலிஸ் புலனாய்வாளர்கள் இந்த வீடியொ குறித்து அறிந்தனர்.
நுவுயு அமைப்பின் குரூர வழக்கு விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்டெஃபன பெல், சாரா ஸமோரா கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ‘இது மிகச் சிறந்த செய்தி. இதற்காக நாம் காத்திருந்தோம்’ எனக் கூறியுள்ளார்.
Average Rating