புதையல் தோண்டிய பிக்குவிற்கு விளக்கமறியல்
Read Time:1 Minute, 15 Second
புதையல் தோண்டிய சந்தேக நபரான பிக்குவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹிங்குராங்கொடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹிங்குராங்கொடை, பன்சல்கொடெல்ல புராதன பூமியில் புதையல் தோண்டி புராதனப் பொருடகளுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தில் பொலிசார் குறித்த பிக்குவை கைதுசெய்து ஹிங்குராங்கொடை நீதிவான் முன் ஆஜர் செய்தனர்.
ஹலாவத்த ஜயபிம விகாரையைச் சேர்ந்த அவுலேகம விமலசிரி என்ற பிக்குவே சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.
பதில் நீதிவான் ஏ.ஏ.நாலக பண்டார சந்தேக நபரான மேற்படி பிக்குவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி உத்தரவிட்டதுடன் மேலதி விசாரணைகளை மேற்கொள்ளும் படி பொலிஸாருக்கும் உத்தரவிட்டார்.
Average Rating