விளையாடிய போது அக்காவை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்

Read Time:1 Minute, 37 Second

8afaccc8-4a9e-435d-b7fc-d6b7880ed822_S_secvpfவிளையாடிய போது தனது அக்காவை 2 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான்.

அமெரிக்காவின் பிலாடெல்பியாவில் உள்ள மாந்துவா நகரை சேர்ந்தவர் ஜமாரா ஸ்டீவன்ஸ் (11). இவளுக்கு 2 வயதில் ஒரு தம்பி இருக்கிறான்.

சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்கு அவர்களது தாயாரின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வீட்டில் இருந்த ‘பிரிட்ஜ்’ மீது வைத்து விட்டு அறையில் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தார்.

வீட்டின், ஹாலில் ஜமாரா தனது தம்பி மற்றும் 2 சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பிரிட்ஜ் மீது இருந்த துப்பாக்கியை எடுத்த சிறுவன் விளையாட்டாக சுட்டான்.

அதில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து சென்று ஜமாராவின் நெஞ்சை துளைத்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவளை பரிசோதித்த டாக்டர் அவள் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடை செய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ள போதிலும், அவர்களின் சொத்தை கருத்தில் கொண்டே தடை! -இராணுவப் பேச்சாளர்
Next post அரபு நாட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து தாக்கிய ஆசாமி