பேஸ்புக் மூலம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயன்றவர் கைது
பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர்.
இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்க அதிகாரச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சைபர் வோச் நடவடிக்கை ஊடாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான இந்த நபர், இலங்கையில் உள்ள முன்னணி சுற்றுலாத்துறை போக்குவரத்து நிறுவனத்தில் கணனித்துறையில் உயர் அதிகாரியாக பணி புரிந்து வருவதாக தெரியவருகிறது.
இந்த நபர், பேஸ்புக் கணக்கின் ஊடாக சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக சைபர் வோச் குழுவினருக்கு தெரியவந்ததை அடுத்து, அது குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்த அதிகாரிகள் சிறுவன் ஒருவரை தேடி, அந்த நபர் வந்த போது கைது செய்துள்ளனர்.
சைபர் வோச் குழுவினர் இதற்கு முன்னர், குருணாகலில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான தென்னை தோட்டம் ஒன்றின் முகாமையாளரை கைது செய்தனர்.
Average Rating