பலவந்த திருமணம் செய்த நபரை, எலி நஞ்சை உணவில் கலந்து கொன்ற சிறுமி
நைஜீரியாவில் கனோ மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், தன்னை பலவந்த திருமணம் செய்த நபரை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
வஸிலு உமர் என்ற மேற்படி சிறுமி, தன்னை விடவும் இரு மடங்கு வயதான தனது கணவரை உணவில் எலிகளுக்கான நஞ்சை கலந்து படுகொலை செய்துள்ளதாக கனோ மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த உணவை உண்ட ஏனைய மூவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் உயிருக்காக போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வட நைஜீரியாவில் சிறுவர் திருமணம் என்பது வழமையாக நடைபெறும் ஒன்றாகும்.
சிறுமியின் தந்தை அவரை மேற்படி 35 வயது நபருக்கு கடந்த வாரம் திருமணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உரிய வயதையடையாத சிறுமியை திருமணம் செய்து வைத்து குற்றச்சாட்டை சிறுமியின் தந்தை எதிர்கொண்டுள்ளார்.
சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் வஸிலு உமர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்பப்படுகிறது.
Average Rating