ஐ.நா விசாரணைக் குழுவில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இருவர்?
Read Time:1 Minute, 13 Second
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில், தமிழீழ விடுதலைப் புலிகள் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்புடைய இருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை தொடர்பில் விஷேட நிபுணர் குழுவொன்று மார்ச் மாத நடுப்பகுதியளவில் நியமிக்கப்படவுள்ளது.
குறித்த குழுவின் அறிக்கை ஒரு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எது எவ்வாறு இருப்பினும் இலங்கை அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating