நடுவானத்தில் பறந்த போது, விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி
Read Time:1 Minute, 11 Second
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ–சர்கரமென்டோவுக்கு தென்மேற்கு ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 134 பயணிகளும், 5 விமான ஊழியர்களும இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென எழுந்த ஒரு பயணி விமானத்தின் கதவை திறக்க முயன்றார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை பிடித்து இழுத்து தடுத்தனர். அதை தொடர்ந்து ஓமேகா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
பின்னர் அந்த பயணி அங்கு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விசாரிக்கப்பட்டார். நல்ல வேளையாக கதவை திறக்க முயன்றபோது அந்த பயணி தடுத்து நிறுத்தப்பட்டார். இல்லாவிடில் மிகப்பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
Average Rating