உ.பி.யில் மகளுக்கு தொல்லை கொடுத்தவர்களை, தட்டிக் கேட்ட டாக்டர் படுகொலை

Read Time:1 Minute, 40 Second

dead-002உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் இன்சவ்லி பகுதியில் வசித்து வருபவர் 42 வயதான இன்த்ரேஷ் பரஷர். மருத்துவரான இவர் தனது மகளுக்கு தொல்லை கொடுத்த 3 இளைஞர்களை தட்டிக்கேட்டதால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார்.

நிஷு, ராகுல் மற்றும் மயங்க் என்ற மூன்று இளைஞர்கள் பரஷரின் மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்தவுடன் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த அவர்களின் குடும்பத்தாரிடம் அவர் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், நேற்று இரவு மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பரஷரை இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை கொண்டு கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொன்றனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் பரஷரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளில் நிஷு மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரை தீவிரமாக தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கியதில், மனைவி பலி!
Next post நாட்டை பிரிக்கும் நோக்கம் எமது கட்சிக்கு இல்லை -சுமந்திரன்