ஜெரோமி கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம்

Read Time:1 Minute, 58 Second

aaaaaயாழ் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக யாழ். மாவட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-

குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது பெற்றோர் தெரிவித்த வாக்கு மூலத்தில் ஜெரோமியின் சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக குறித்த இரு பாதிரியாரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர்களிடம் இருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்பு வழங்கியிருந்த வைத்திய அறிக்கையில் சந்தேகம்எழுந்துள்ளதால் எதிர்வரும் 23 திகதி சட்ட வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும் உடற்கூற்றுபரிசோதனை அறிக்கை கிடைத்த பின்புதான் இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும், வாக்கு மூலங்களை வைத்து யாரையும் கைது செய்ய முடியாது என்றும் இன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம உறுப்பை வெட்டி, தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர்
Next post புலிகள் இயக்க நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு