பிறந்து ஐந்து நாள் சிசுவை வீதியில் வீசிய தாய் விளக்கமறியலில்..
Read Time:1 Minute, 1 Second
பிறந்து ஐந்து நாட்கள் மட்டுமேயான சிசுவை வீதியில் வீசிச் சென்ற தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாய், சிசுவை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையின் முன்னுள்ள பஸ் தரிப்பிடத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
இதன் பின்னதாக விசாரணைகளை மேற்கொண்ட பலாங்கொடை பொலிஸார் சிசுவின் தாயாரை கைது செய்துள்ளனர்.
வேவெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டு பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating