14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, இளைஞனுக்கு விளக்கமறியல்

Read Time:2 Minute, 19 Second

arrest12அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேரந்த 10ஆம் ஆண்டில் கல்விப்பயின்று வரும் 14 வயது நிரம்பிய உறவினர் வீடொன்றை இருந்து கல்விபயின்று வந்தவேளை திருக்கோவில் பிரதேச பிரிவில் உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய வீதியைச் சோ்ந்த 18 வயதுடைய இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குறித்த இளைஞர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தையார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருந்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச் சம்பவத்தில் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை பிரிந்த சந்தானம்?
Next post சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..!