நொறுக்கப்பட்ட கண்ணாடிகளின் மீது நின்று பல்லினால் 2,725 கி.கி வேனை இழுத்து சாகசம்
சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சுமார் 2,725 கிலோ கிராம் நிறையுடைய வேன் ஒன்றினை நொறுக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்களி;ன் மீது நின்று பல்லினால் இழுத்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சாகச நிகழ்வினை 20 வயதான யங் டோங் என்ற இளைஞன் அண்மையில் சீனாவில் புஜியான் மாகாணத்திலுள்ள புசௌவு நகரில் மேற்கொண்டுள்ளார்.
நொறுக்கப்பட்ட போத்தல் கண்ணாடிகளால் 13 அடி நீளமான பாதை அமைத்துள்ளார். பின்னர் வேன் ஒன்றினுள் 9 பேரை ஏற்றியுள்ளார். இதன் நிறை மொத்தமாக சுமார் 2,725 கிலோ கிராம் ஆகும்.
இந்த வேனையே நொறுக்கப்பட்ட கண்ணாடிகள் மீது நின்று பல்லினால் இழுத்து சாகசம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இது ஒரு உலக சாதனையா என்பது குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த வருடம் இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவரும் சுமார் 2,725 கிலோ கிராம் நிறையுடைய ட்ரக் வண்டி ஒன்றினை பல்லினால் இழுந்திருந்தார். ஆனால் அவர் வெறும் தரையிலேயே அந்த சாகஸத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating