ஆண் ஒட்டகத்தின் துணையின்றி குட்டி ஈன்ற பெண் ஒட்டகம்
Read Time:57 Second
ஆண் ஒட்டகம் எதுவுமற்ற பண்ணையொன்றில் வாழ்ந்த பெண் ஒட்டகமொன்று குட்டியொன்று ஈன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
டொறிஸ் என்ற மேற்படி ஒட்டகம் பிறிதொரு பெண் ஒட்டகத்துடன் வட ஜோர்க்ஸிலுள்ள றிச்மண்ட் நகரிலுள்ள பண்ணையில் வாழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஆண் ஒட்டகம் எதனுடனும் தொடர்பின்றி வாழ்ந்த டொறிஸ் குட்டி ஈன்றமை மர்மமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மர்மத்துக்கு ஒட்டகத்தின் நீண்ட கால கர்ப்பநிலையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
Average Rating