ஒரே நேரத்தில் ரெண்டு பெண்களுடன் திருமணம் – ஒன்றாகவே ”முதலிரவு”
ஜேஜியாங்: சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான “ஷி”.
இவர் கடந்த 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
ஒரே கல்லில் ரெண்டு:
இருவரும் தன்னை காதலிப்பதால் இருவரில் ஒருவரை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்றும், எனவே இருவரின் சம்மதத்தோடு இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்னாத்தான் வாழ்வோம்:
இருபெண்களும் திருமண தினத்தன்று மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும், தாங்கள் இருவரும் ஒற்றுமையாக கடைசிவரை ஷியுடன் வாழ்வோம் என்றும் கூறினர்.
“நல்ல” பெற்றோர்:
ஷியின் பெற்றோர் இந்த திருமணம் குறித்து கூறியபோது, தங்கள் மகனின் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.
மச்சம்டா உனக்கு:
திருமண தினத்தன்று இரு மணமகள்களும் ஒன்றாகவே முதலிரவு அறைக்குள் அனுப்பப்பட்டதாக ஷியின் உறவினர்கள் கூறினர்.
சீனாவில் குற்றம்:
இரண்டு பெண்களை திருமணம் செய்தது குறித்து சீன சட்டப்படி குற்றமாகும்.
இரு பெண்களின் சம்மதத்துடன் ஷி திருமணம் செய்திருந்தாலும், ஒரு திருமணத்தை மட்டுமே சட்டப்படி ரிஜிஸ்டர் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Average Rating