இரண்டு வயது தம்பியை, சுட்டுக் கொன்ற 3 வயது அக்கா
Read Time:1 Minute, 25 Second
அமெரிக்காவில் சொந்த அக்காவே, தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ‘உத்தவில் கேகி’ பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த கைத்துப்பாக்கியை விளையாட எடுத்துவந்த 3 வயது சிறுமிக்கும் அவருடைய 2 வயது தம்பிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன்போது தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள், குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை குழந்தைகள் விளையாடும் இடத்தில் அவர்களது பெற்றோர் கவனக்குறைவாக வைத்திருந்ததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனக் கூறியுள்ளனர்.
Average Rating