உங்களை நீங்களே போட்டோ எடுத்துக்கறீங்களா.. அப்ப சைக்யாட்ரிஸ்ட்டை போய்ப் பாருங்க!
நமக்கு நாமே.. இது கருணாநிதி கொண்டு வந்த நல்ல திட்டம்.. ஆனால் நமக்கு நாமே போட்டோ எடுத்துக் கொண்டால் அது மன நல பாதிப்பாம்..
அமெரிக்க மன நல சங்கம் இப்படிக் கூறியுள்ளது. இப்பெல்லாம் யாரைப் பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் இந்த செல்ஃபி எனப்படும் தங்களைத் தாங்களே செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வதில் ஒரு பெரும் ஆர்வமே காட்டுகிறார்கள்.
ஆனால் இது மன நல பாதிப்பின் அடையாளம் என்று கூறி பீதியைக் கிளப்புகிறது அமெரிக்க மன நல சங்கம். சற்று சீரியஸ்…
ஒரு நாளைக்கு குறைந்து 3 படங்களை எடுப்பதோடு அதை அடிக்கடி சோஷியல் மீடியாவில் போட்டு வந்தால் உங்களுக்கு லேசாக முற்ற ஆரம்பித்துள்ளது என்று அர்த்தமாம்.
அடிக்கடி இப்படி போட்டோ எடுத்தபடி இருந்தால், அதை ஷேர் செய்தபடி இருந்தால் உங்களுக்கு முற்றி விட்டது என்று அர்த்தமாம்.
இப்போதைக்கு இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை என்றெல்லாம் எதுவும் இல்லையாம். சாதாரண நடத்தை தெரப்பி மட்டும்தான் இருக்கிறதாம்.
ஆனால் இந்த தெரப்பியை அமெரிக்காவின் ஒபாமா கேர் திட்டத்தில் சேர்த்துள்ளனராம்.
எனவே குறைந்த காசில் இந்த தெரப்பியை எடுத்துக் கொண்டு சரி செய்து விடலாமாம். அப்பன்னா ஒபாமாதான் முதல்ல தெரப்பிக்குப் போகனும்…
Average Rating