தன்னை மனிதனென கருதும் நாய்
Read Time:1 Minute, 20 Second
பிரித்தானிய வட ரைனிசைட்டில் பொரெஸ்ட் ஹோல் எனும் இடத்தைச் சேர்ந்த நாயொன்று தன்னை ஒரு மனிதன் போன்று கருதி மனிதர்கள் போன்று செயற்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
மெல்ஸ்ரோக்ஸ், (39வயது) மற்றும் அவரது மனைவி எலியொட் அலெக்ஸாண்டர், (38வயது) ஆகியோரால் வளர்க்கப்பட்டு வரும் இந்த 4அடி உயரமும் 41இறாத்தல் நிறையும் கொண்ட நெல்லி என்ற நாய் தனது எஜமானரின் கட்டிலில் அவருடன் உறங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அத்துடன் அது காலை உணவாக ஒரு கிண்ண தேநீரையும், இனிப்பான தின்பண்டங்களையும் உண்கிறது.
ஐஸ்கிறீம் வண்டி வரும்போது ஐஸ்கிறீம் வாங்க ஏனைய சிறுவர்களுடன் அந்த வண்டி முன் காத்திருக்கிறது.
நாயின் இந்த நடவடிக்கையை அவதானித்த அதன் எஜமானார் குறிப்பிட்ட ஐஸ்கிறீம் வண்டிக்கு நாய்க்கு ஐஸ்கிறீமை வழங்க பணத்தை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Average Rating