யாழ். இணுவில் பகுதியில், மனைவி இறந்த சோகத்தில், கணவன் அசிட் அருந்தி தற்கொலை

Read Time:1 Minute, 41 Second

deadgirl2யாழ். இணுவில் பகுதியில் மனைவி இறந்த சோகம் தாங்காது கணவனும் அசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 50 நாட்களுக்கு முன்னர் யாழ். இணுவில் பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

கீர்த்திகா என்ற 16 வயதுடைய இந்த இளம் குடும்ப பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது கணவர் பொலிஸாரினால் தொடர்ந்து விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவனும் நேற்று மதுபோதையில் அசிட்டை எடுத்து அருந்தியுள்ளார்.

அதேவேளை உயிரழந்தவரின் உடலில் பெண்ணின் பெயர் அசிட்டினால் எழுதப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 25 வயதுடைய வசீகரன் என்ற குடும்பஸ்தராவார்.

இவருடைய மனைவி திருமணமாகி 20 ஆவது நாள் வீட்டில் சேலையில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!
Next post 8 வயது மகளை பயணப்பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்திய தந்தை