9 வயது சகோதரியை தொடர்ந்து இரு வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு சிறை!

Read Time:1 Minute, 46 Second

rape-011தனது சகோதரி 9 வயது சிறுமியாக இருந்தது முதற்கொண்டு இரு வருடங்களாக அவரை 50க்கு மேற்பட்ட தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேற்படி குற்றச்செயலை ஆரம்பிக்கும் போது அந்த சிறுவனின் வயது 13 ஆகும். மேற்படி சிறுவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சகோதரி மனரீதியிலும் உடலியல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கை விசாரித்த லிங்கன் கிறவுண் நீதிமன்ற நீதிபதி மன்று நீதிபதி அந்த அப்பாவிச் சிறுமிதான் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் வைத்து துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுவன் தனது சுயநலத்துக்காக சகோதரியை அச்சுறுத்தி தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்படி சிறுவன் வயது வந்தவனாக இருக்கும் பட்சத்தில் அவனால் மேற்கொள்ளப்பட்ட குற்ற செயலுக்கு 10 வருட சிறைத்தண்டனையை விதித்திருக்க நேரிட்டிருக்கும் என அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8 வயது மகளை பயணப்பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்திய தந்தை
Next post வாத்து தாக்கியதில் மணிக்கட்டு உடைந்தது… ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்கும் அமெரிக்க பாட்டி