8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்

Read Time:2 Minute, 13 Second

rape.priest-sexual-abuseநுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு மே மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துஸ்பிரயோக சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாய் கூலி வேலை செய்பவர் எனவும் தந்தை கொழும்பில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் உரிய கவனிப்பு இல்லாததால் சிறுவனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கந்தப்பளை தேயிலைமலைத் தோட்டத்தில் இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கு காரணம் குறித்த தோட்டத்தில் காணப்படும் மது விற்பனையும் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துச் செல்கின்றமையும் என தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தில் மது பாவனையையும் விற்பனையையும் தடுக்காவிட்டால் இன்னும் பல அசம்பாவிதங்கள் குற்றச் செயல்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது என சமூக அக்கரைகொண்ட பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!
Next post துபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன், மீளவும் இணைந்த இலங்கை சிறுமி