8 வயது சிறுமியை, வல்லுறவு செய்த நபர் விஷம் அருந்தினார்

Read Time:1 Minute, 19 Second

rape.child8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தல் – சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்.

கடை ஒன்றுக்கு முட்டை வாங்கச் சென்ற சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று கடை உரிமையாளரான சந்தேகநபர் வல்லுவுக்கு உட்படுத்தியதாக தெரியவருகிறது.

பின்னர் சிறுமி வீடு திரும்பி தாயிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்ததை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்யப்பட்டதை தெரிந்து கொண்ட சந்தேகநபர் விஷம் அருந்தியுள்ளார்.

முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 63 வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை
Next post மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது