ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு, பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது

Read Time:2 Minute, 2 Second

questலண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து சிக்கினார்.

அந்த ஆண் ஒரு இந்தியர் ஆவார். அவரது பெயர் வினய் போச்சம்பள்ளி. ஆந்திராவைச் சேர்ந்தவர்.

இவர் அந்தப் பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். பின்னால் இருந்து எக்கி அந்தப் பெண்ணின் மார்புகளைப் பிடித்து அநாகரீகமாக நடந்துள்ளார்.

இவரது இந்த செயல் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இதைப் பார்த்த சக பயணிகள் சத்தம் போடாமல் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

தூக்கத்தில் இருந்த பெண் பயணி, தனது மார்பில் ஏதோ ஊறுவது போல உணர்ந்து பார்த்த போது தான், சீட்டின் கேப் வழியாக வினய் கையை உள்ளே விட்டு சில்மிஷம் செய்தது தெரிய வந்து கத்தியுள்ளார்.

அதன் பின்னர் விமானம் தரையிறங்கியதும் வினய் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்து கோர்டடில் நிறுத்தினர்.

ஏப்ரல் 15ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது வினய் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வினய் இந்தியக் குடியுரிமையுடன் இருக்கிறாரா அல்லது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளாரா என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களை கண்டு அலறலும் நடிகை!
Next post கனேடிய பெண் போலீஸ் அதிகாரியை கற்பழித்த, பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் கைது