வத்தளையில் சிறுமி மீது வல்லுறவு எகிப்து கள்ளக் காதலனும், தாயும் கைது

Read Time:3 Minute, 4 Second

rape.boy-abuseகள்ளக் காதலியின் நான்கு வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய எகிப்து நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் அவரின் கள்ளக் காதலியான சிறுமியின் தாயையும் வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு வருட காலமாக இலங்கையில் தங்கியிருந்து தொழில் புரியும் 28 வயதுடைய எகிப்தைச் சேர்ந்தவரும் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தன் கணவருடனும் பிள்ளையுடனும் கடவத்தை பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பெண் வெளிநாட்டு வேலை, வாய்ப்பு நிலையம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

அப்போது தான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்திற்கு அடிக்கடி வரும் எகிப்து நாட்டவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் கணவரை கைவிட்டு விட்டு பிள்ளையுடன் வத்தளை பங்களாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் எகிப்து நாட்டவருடன் இப் பெண் வாழ்ந்து வந்துள்ளார்.

தன் பிள்ளையைத் தேடி கணவன் வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள மனைவியின் வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்துச் செல்ல முற்படும் போது சிறுமி தந்தையிடம் தெரிவித்த தகவலின் படி சிறுமியை ராகம வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக எகிப்தைச் சேர்ந்தவரை கைது செய்ததுடன், சந்தேக நபர் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த உதவிபுரிந்த குற்றத்திற்காக சிறுமியின் தாயையும் கைது செய்ததாகவும் இவர்கள் மீதான விசாரணைகள் முடிந்தவுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்ரர் எஸ்.கே. எச்.மீஎல்ல வின் தலைமையில் இன்ஸ் பெக்ரர் பிரியந்த ரத்னாயக்க , பெண் பொலிஸ் அதிகாரி சசிகலா ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனேடிய பெண் போலீஸ் அதிகாரியை கற்பழித்த, பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் கைது
Next post விமானி அறையை கழிவறையாக நினைத்து, நுழைந்த பயணி கைது