ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பு பொருத்தப்பட்ட யுவதி
விஞ்ஞானிகளின் புதுமையான ஆய்வில் பங்கெடுத்த யுவதி ஒருவர் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பு பொருத்தப்பட்ட பின்னர் தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அண்மையில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேயர் ரொகிடன்ஸ்கை குஸ்டெர் ஹோஸர் (எம்.ஆர்.கே.எச்.) எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பெயா வெளியிடப்படாத மெக்ஸிகோவைச் சேர்ந்த யுவதியே மேற்படி தகவலினை வெளியிட்டுள்ளார்
தற்போது இப்பெண்ணினால் இயல்பான உடலுறவு ஈடுபடவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் முடியும். தனது வாழ்க்கையை மாற்றியமைத்த ஆய்வு குறித்து மேற்படி யுவதி கூறுகையில், உண்மையில் நான் அதிர்ஷ்டமானவள் ஏனெனில் எனது இயல்பு வாழ்க்கையை என்னால் வாழ முடியும்.
எனக்குத் தெரியும், நான் இச்சிகிச்சை வெற்றிபெற்ற முதல் பெண்களில் முதலானவள். எனது பாதிப்புக்கு ஆய்வு கூடத்தில் விடை கிடைத்துள்ளது.
இதேபோன்ற பிரச்சினை உள்ள பெண்களின் இயல்பு வாழ்க்கைக்கு சிகிச்சை உள்ளது என்பதை தெரியப்படுத்தும் முக்கியமான ஒரு விடயம் இது’ என சத்திரசிகிச்சைக்கு நன்றி கூறியுள்ளார்.
இவ்வாய்வினை அமெரிக்காவின் வின்ஸென்ஸ் ஸலெமிலுள்ள வேக் பொரஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் மெக்ஸிகோவின் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating