சனீஸ்வரன் கோவிலுக்கு போலியாக நிதி சேகரித்தவர் துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸாரால் கைது
சனீஸ்வரன் கோவிலுக்கு ஆதார நிதி சேகரிப்பதற்கான பற்றுச்சீட்டைக் காட்டி பொதுமக்களிடம் போலியாக நிதி சேகரித்துக் கொண்டிருந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணையில் கைது செய்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச்சந்தேக நபரிடமிருந்து போலி இரும்புத் துப்பாக்கியொன்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சந்தேக நபர் முன்னர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக இருந்ததாகவும் தற்போது கோவில்களில் அறப்பணி செய்வதாகவும் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சந்தேகமடைந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating