பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது
Read Time:1 Minute, 9 Second
பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றி திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்துள்ளனர்.
ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இம் மாதம் முதலாம் திகதி அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிறை காவலர்களின் பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
வவுனியா குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயபாலன் ஸ்டேன்லி ரமேஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து தொப்பியணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating