3 பேர் சுருக்கிட்டு தற்கொலை

Read Time:1 Minute, 53 Second

sucide-008கடந்த 24 மணித்தியாலங்களில் 20 வயதுக்கு உட்பட்ட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

புஸ்ஸல்லாவை நகரையொட்டிய கிராமமொன்றில் இன்று காலை 16 வயது பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புஸ்ஸல்லாவ ரொச்சைல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புசல்லாவ பிரதேசத்தின் பிரபல பாடசலை ஒன்றில் தரம் எட்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாணவனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

வென்னப்புவ – மஹவத்த பிரதேசத்தில் அயல் வீட்டு சிறார்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருகின்ற நிலையில், அவர் தந்தை மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது
Next post கோவில் விழாவில்; 8 மாதமாக பேசாமல் இருந்த பெண், திடீரென பேசிய அதிசயம்