கோவில் விழாவில்; 8 மாதமாக பேசாமல் இருந்த பெண், திடீரென பேசிய அதிசயம்

Read Time:1 Minute, 46 Second

002mஇந்தியா வானூர் அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மனைவி வேல்விழி (வயது 28). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை திடீரென இறந்துவிட்டார். இதில் வேல்விழி கடுமையான அதிர்ச்சி அடைந்தார். குழந்தைளை கவனிக்க முடியாமல் திணறி வந்தார்.

இந்த நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு திடீரென அவரது பேச்சு நின்றுவிட்டது. அவர் எவ்வளவோ முயற்சித்தும் பேச முடியவில்லை.

எனவே அவரை பல்வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பேச்சு வரவில்லை. இனிமேலும் ஒன்றும் செய்யமுடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். இந்த நிலையில் அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.

இதில் ஊரில் உள்ள பெண்கள் தீச்சட்டி எடுத்து சென்றனர். வேல்விழியும் தீச்சட்டி எடுத்து சென்றார். பக்திபரவசத்துடன் கூச்சலிட்டபடி சென்றார். அப்போது திடீரென அவருக்கு பேச்சு வந்தது. பழைய மாதிரி அவர் சரளமாக பேசினார்.

இதுபற்றி வேல்விழி கூறும்போது, அம்மன் அருளால்தான் எனக்கு பேச்சுவந்துள்ளது என்று தெரிவித்தார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 பேர் சுருக்கிட்டு தற்கொலை
Next post (PHOTOS) உலக சாதனை படைத்த கோலி பிளவர்..!