விமானியின் சாதுர்யம், உயிர் காக்கப்பட்ட 93 பயணிகள்
அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வேலை விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணிக்க தொடங்கியது.
குறித்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த நிலையில் விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும் குறித்த விமானத்தில் பயணித்த 93 பயணிகளும் எந்த வித உயிர்சேதங்களும் இன்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating