கர்ப்பமாக இருப்பதை அறியாது, பிறந்த குழந்தையை மலசலகூடத்தில் தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயன்ற தாய்

Read Time:1 Minute, 42 Second

child-003தாயொருவர் தொப்புள் கொடிகூட அகற்றப்படாத நிலையிலிருந்த புதிதாகப் பிறந்த குழந்தையை மலசல கூட உபகரணக்குழியினூடாக தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயற்சித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. னினும், குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத மேற்படி பெண் கடும் வயிற்றுவலிக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனை மலசல கூடத்திற்கு அவசரமாக வந்த அந்தப் பெண் அங்கு ஏற்கெனவே இருந்த பெண்ணை அவசரமாக வெளியேறி வருமாறு கோரி உள்ளே பிரசவேசித்து உட்புறமாக தாளிட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மலசல கூடத்துக்குள்ளிருந்து குழந்தையொன்றின் அழுகுரல் கேட்டு வெளியே காத்திருந்த பெண்கள் திகைப்படைந்து மலசலகூட கதவைத் தட்டியுள்ளனர்.

அந்தப் பெண் கதவை திறக்காததையடுத்து மருத்துவமனை காவலாளியொருவர் மலசலகூடக் கதவை உடைத்து திறந்தார்.

தொடர்ந்து மலசலகூட உபகரணக் குழிக்குள் இருந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

தற்போது தாயும் சேயும் நலமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) 1,300 கோடி ரூபா சொத்து கொண்ட, நடிகர் ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணி, மிஞ்சிய பீட்ஸா கொடுத்த பெண்
Next post சகநடிகைகளை பொறாமைப்பட வைத்த நடிகை!