காமசூத்ரா 3டி பட புகழ் ஷெர்லின் சோப்ரா, தமிழில் நடிக்கும் “பேட் கேர்ள்”

Read Time:2 Minute, 16 Second

serlinகாமசூத்ரா 3டி படத்தின் மூலம் அதிரடி புகழ்பெற்றவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது மலையாளத்தில் பேட் கேள் (மோசமான பெண்) என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இது மெலினா என்கிற இத்தாலி படத்தின் தழுவல் என்கிறார்கள். இந்த படத்தை ஷாஜியம் என்பவர் இயக்குகிறார்.

பேட் கேர்ள் படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் போஜ்புரி மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தை ஷா பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சலீம் ஷா என்பவர் தயாரிக்கின்றார்.

இதன் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது. ஜூலை மாதம் ரிலீசாகிறது.

பேஷன் தொழில் செய்யும் ஒரு பெண் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை சொல்வதுதான் கதை. ப்ரியா ஷர்மா என்ற கேரக்டரில் நடிக்கும் ஷெர்லின் சோப்ரா, இந்த படத்தின் கதை தன்னை கவர்ந்ததாகவும், கிளாமர் மட்டுமின்றி நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கின்றது என்ற காரணத்தால் இதில் நடிக்கஒப்புக்கொண்டேன் என்று கூறுகிறார்.

இந்த படத்தின் இயக்குனர் ஷாஜியம் கூறும்போது, இந்த கதையை தேர்வு செய்தவுடன் இதில் நடிக்க மல்லிகா ஷெகாவத் அல்லது ஷெர்லின் சோப்ரா ஆகிய இருவரில் ஒருவர் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஷெர்லின் இந்த படத்தில் நடிப்பதால், இந்த படத்தை உலக அளவில் வியாபாரம் செய்ய மிகஎளிதாக இருக்கும் என்றார்.

இந்த படத்திற்கு ஸ்ரீமுரளி என்பவர் இசையமைக்கிறார். இவர் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் கீபோர்டு வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் கருவை காப்பாற்ற, மாமியாரைக் கொன்ற இந்தியப் பெண் விடுதலை
Next post சின்னபண்டிவிரிச்சான் மினி சூறாவளியினால் அழிவுகள்..