உடுப்புக் கழுவச் சென்ற பெண் நீரில் மூழ்கி மரணம்
Read Time:56 Second
பதுளை மாவட்டம் ஹபுதலை, உஸ் விகாரகலவத்த பிரதேசத்தில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாவியில் ஆடை கழுவுவதற்காகச் சென்றவேளை கால் வழுக்கி விழுந்து குறித்த பெண் நீரில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில் ஹபுதலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக ஹபுதளை பொலிஸார் தெரிவித்தனர்.
உஸ் விகாரகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபுதலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating