ஒருதலை காதலால், இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை

Read Time:3 Minute, 28 Second

502928242980dc9aa27136ff06fcd986ஒருதலைக் காதலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்து துண்டு, துண்டாக உடலை வெட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை பொலிஸார் கைப்பற்றி விசாரித்தனர்.

அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் இறங்கினர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் போது சென்னை நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10வது தெருவில் வசித்து வந்த ஸ்ரீராமின் மனைவி ரேகா (25) என்பவர் வேலைக்கு சென்று 2 நாட்களாகியும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரேகாவின் கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று பொலிஸார் உடலை காட்டினர். ஸ்ரீராம் அது தனது மனைவி ரேகா தான் என்று அடையாளம் காட்டி கதறி அழுதார்.

குறித்த கொலையின் பின்னணி தொடர்பில் தெரியவருவதாவது,

திருமணத்திற்கு முன்பு ரேகா கால்சென்டரில் வேலை செய்தபோது, அவரை வீட்டில் இருந்து நிறுவனத்திற்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரேகா உள்ளிட்ட ஊழியர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியை டிரைவர் சாம்சன்(25) செய்து வந்தார். ரேகாவை சாம்சன் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

தனது காதலை அவர், ரேகாவிடம் பல முறை தெரிவித்துள்ளார். ஆனால், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறி ரேகா மறுத்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து சாம்சன், ரேகாவை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து ரேகாவின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். பின்னர் பொலிஸார் சாம்சனை எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையே ரேகாவிற்கும், ஸ்ரீராமுக்கும் திருமணம் நடந்ததால் ஆத்திரத்தில் இருந்த சாம்சன் ‘தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று நினைத்து, சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேகாவை கடத்திச் சென்று கொலை செய்து கொடூரமாக உடலின் கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி மூட்டை கட்டி போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்றார்.

மேற்கண்ட தகவல்கள் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாருடன் இணையப் போகும் பொதுபல சேனா
Next post தனது முன்னாள் மனைவியை, வீட்டின் இரகசிய நிலவறையில் சிறைவைத்த கணவர்