தனது முன்னாள் மனைவியை, வீட்டின் இரகசிய நிலவறையில் சிறைவைத்த கணவர்

Read Time:2 Minute, 34 Second

003qதன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை இரகசிய நிலவறையில் அடைத்து வைத்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சிசுவான் பிராந்தியத்தில் டேயங் நகரைச் சேர்ந்த லின் டஜூன் (40 வயது) என்ற மேற்படி நபர் தனது முதலாவது மற்றும் இரண்டாவது மனைவியர் தன்னை விட்டு பிரிந்து சென்றதையடுத்து தனது வீட்டின் அடியில் இரகசிய நிலவறையொன்றை நிர்மாணித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினம் தனது முதல் மனைவியான லின்யானை (35 வயது) சந்தித்த லின் டஜூன் அவருடன் முக்கிய விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனத் தெரிவித்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

தொடர்ந்து அவர் லின்யானை சங்கிலியால் கட்டி தனது இரகசிய நிலவறையில் அடைத்து வைத்துள்ளார்.

அந்த நிலவறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றால் கொல்லப்பட நேரிடும் என அவர் தனது முன்னாள் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

லின் டஜூன் வீட்டில் இருக்கும் வேளையில் மட்டும் லின் யானுக்கு வீட்டுக்குள் நடமாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லின்யானின் புதிய கணவர் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த போதும் பொலிஸாரால் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது.

இந்நிலையில் சனத்தொகை கணக்கெடுப்பின் போது லின் யானின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் லின் டஜூனிடம் விசாரணை செய்யச் சென்ற பொலிஸார் நிலவறையிலிருந்து வெளிப்பட்ட ஒலியைக் கேட்டு தேடுதலை நடத்திய போதே அங்கு லின்யான் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சிறை வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருதலை காதலால், இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை
Next post திருமணமான ஆணுடன் விதவை பெண் கள்ள உறவு: மக்கள் முன் 9 முறை பிரம்படி