கை செலவு பணத்துக்காக விபசாரத்தில் இந்திய டீன் ஏஜ் பெண்கள்: கனடாவில் நடக்கும் அவலம்
அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். கனடா முன்னேறிய நாகரீக நாடுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் இந்தியர்களையும் நாகரீக மோகம் ஆட்டி படைக்கிறது. குறிப்பாக பெண்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் `டீன் ஏஜ்’ பெண்களுக்கு வீட்டில் போதுமான பணம் கிடைப்பது இல்லை. எனவே கை செலவுக்கான பணத்தை அவர்கள் வேறு வழிகளில் தேடுகின்றனர்.பலர் விபசாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். வீட்டுக்கு தெரியாமல் இந்த தொழிலில் ரகசியமாக இறங்கி உள்ளனர். இவர்களில் சிலருக்கு போதை மருந்து கும்பலுடனும் தொடர்பு இருக்கிறது.
போதை மருந்து கும்பலை சேர்ந்தவர்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் கிடைக்கும் என்பதால் அவர்களை நாடி செல்கின்றனர். நாளடைவில் அவர்களே போதை மருந்து கும்பலில் சேர்ந்து போதை மருந்து கடத்தலிலும் ஈடுபடுகிறார்கள்.
இது கனடா போலீசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களை தடுக்க போலீசார் இந்திய அமைப்புடன் சேர்ந்து இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார்கள்.
இந்திய பெண்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் கனடா நாட்டு டெலிவிஷனிலும் விசேஷ நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றது.