கணேசபுரம் பாடசாலையின் வகுப்பறை கட்டுமானத்திற்கு உதவி
Read Time:1 Minute, 0 Second
வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்விகற்கும்; உயர்தர வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியினை புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கிவைத்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியினை திரு. சிவநேசன் பவன் அவர்கள் பாடசாலையின் அதிபரிடம் வழங்கிவைத்துள்ளார்.
மேற்படி வகுப்பறையின் கட்டுமானப் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும்; நிலையில் அதனைக் கட்டி முடிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது,
Average Rating