இந்தியாவில் நடிகர் கொன்று புதைப்பு; மூவர் கைது
இந்தியாவில் திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த நடிகர் காகிதபுரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரொனால்ட்பீட்டர் திருநெல்வேலி நகரை சேர்ந்த நண்பர் உமாசந்திரன் மற்றும் சிலருடன் சேர்ந்து இணையதளம் மூலம் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரொனால்ட் பீட்டரை காணவில்லை என சகோதரர் ஜஸ்டின்பிரின்சோ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வழக்கில் மூவரை பொலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.விசாரணையில் நடிகர் ரொனால்ட்பீட்டர் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.
இதேவேளை, புதைக்கப்பட்ட நடிகர் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்படவுள்ளது.
புதுமுக நடிகரை கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating