நில்வள கங்கையில் குதித்து பெண் தற்கொலை
Read Time:49 Second
மாத்தறை, மகாசாம பாலத்தில் நில்வள கங்கையில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் இன்று முற்பகல் 11 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் நில்வள கங்கையில் குதித்துள்ளார்.
இவரது சடலம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை, நாகுலுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Average Rating