மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய, 10 பிள்ளைகளின் தந்தை ரயில் மோதி மரணம்..
Read Time:46 Second
மதுபானம் அருந்திய பின்னர் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபரொருவர் ரயிலினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இலவங்குளம் வேப்பமடு அருகில் இடம்பெற்றது.
புத்தளம் மன்னார் வீதி 46 மைல் அருகிலுள்ள வேப்பமடு கிராமத்தைச் சேர்ந்த பத்து பிள்ளைகளுக்கு தந்தையான ஒருவரே மரணமானவராவார்.
மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் நகர திடீர் மரண விசாரணை அதிகாரி புகையிரத விபத்தினால் ஏற்பட்ட விபத்து மரணம் என தீர்ப்பு வழங்கினார்.
Average Rating