15 அடி ஆழ குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்!
Read Time:45 Second
மொரவக யஹலவில தோட்டாத்திற்கு நீர்பெற்றுக் கொள்வதற்காக வெட்டப்பட்டிருந்த 15அடி ஆழமான குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆறு வயதான சூர்யா மற்றும் எட்டு வயதான வேலாயுதம் விஜயகுமாரன் ஆகிய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மொரவக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating