19 வருடங்கள் வீசாயின்றி தங்கியிருந்த இந்தியர் கைது
கடந்த 19 வருடங்களாக வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜையொருவர் அனுராதபுரம் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – கோலிபென்தேவ – பரகஸ்வென்வெள பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்;டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரியவர் இன்று அனுராதபுரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த இந்திய பிரஜை 1995 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்ததுடன், இலங்கைப் பெண்ணொருவரையும் திருமணம் புரிந்துள்ளார்.
இதுதவிர, போலியான கடவுச் சீட்டுகளை தயாரித்து அவர் வெளிநாடுகள் பலவற்றுக்கும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டமூலத்தை மீறும் வகையில் சட்டவிரோமாக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Average Rating