லக்கலயில் துப்பாக்கிச் சூடு; வெளிநாட்டு யுவதி படுகாயம்
லக்கல வில்கமுவ புஸ்எல்லயாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வனஜீவராசிகள் மற்றும் வனாந்தரம் தொடர்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த 19 வயதுடைய வெளிநாட்டு யுவதி ஒருவரே இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட யுவதி புஸ்எல்லயாய வனாந்தர பகுதியில் சுற்றுலா சென்ற நிலையில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியின் செயற்படுத்தும் பகுதி மிதிபட்டதால் அந்தத் துப்பாக்கி இயங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று மாலை 5.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யுவதியின் இரண்டு கால்களிலும் படுகாயமேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அதன் பின்னர் அவர் மஹியங்கனை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating