இராணுவ முகாமினை புகைப்படம் எடுத்த மூவர் கைது
Read Time:1 Minute, 6 Second
கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமினை கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்த மூவரை இராணுவத்தினர் திங்கட்கிழமை (19) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தினைச் யுவதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரணைமடுப் பகுதியினைச் சுற்றிப் பார்க்க வந்த மேற்படி மூவரும், கனகாம்பிகைக்குளம் பகுதியில் நின்று உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த இரணைமடு இராணுவ முகாமினை புகைப்படமெடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating