(PHOTOS) யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 32 பெண்கள் இன்று முதல் இணைப்பு
Read Time:1 Minute, 6 Second
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நேர்முகத்தேர்வு யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 பேர் அழைக்கப்பட்டு அவர்கள் 32பேரும் இன்று முதல் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கான பயிற்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட இராணுவ ஊடகப்போச்சாளர் ரஞ்சித் மல்லவராச்சி தெரிவித்தார்.
Average Rating