10வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 8வயது சிறுவன்
10வயது சிறுமியொருவர் தனது வகுப்பில் கல்வி கற்கும் 8வயது மாணவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட விபரீத சம்பவம் அமெரிக்க ஒக்லஹொமா நகரில் இடம்பெற்றுள்ளது.
எட்ஜிமியா ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மேற்படி 10வயது சிறுமி பாடசாலை கழிப்பறைக்கு சம்பவ தினம் சென்ற போது 8வயது மாணவனும் அவரது சகோதரியும் சிறுமியை தாக்கியுள்ளனர்.
அதன் பின் சிறுவனின் சகோதரி குறிப்பிட்ட மாணவியை தரையில் அழுத்தி பிடித்திருக்கிறார். சிறுவன் அந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 10 வயது சிறுமி அங்கிருந்து அழுதவாறு சென்று தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள 10 வயது சிறுமியின் தாயார் விபரிக்கையில் நான் இதற்காக அந்த சிறுவர்களை மட்டும் குற்றஞ்சாட்டவில்லை.
பாடசாலையில் பிள்ளைகள் இருக்கும் போது அவர்களைப் பாதுகாக்கத் தவறிய ஆசிரியர்களையும் குற்றஞ்சாட்டுகின்றேன் என்று கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating