இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிய தந்தை கைது
இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் கோரி மெக்கர்த்தி இவரின் 2 வயது மகள் நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டு இருந்தார்.
அவருடன் ஒரு நாய்க்குட்டியும் விளையாடி கொண்டு இருந்தது. இந்நிலையில் சிறுமி நாய்குட்டியை தூக்கினார். நாய்குட்டி தவறி நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து விட்டது.
சம்வத்தால் கோபமடைந்த மெக்கர்த்தி தனது மகளை குளத்தில் எறிந்ததார். இது தொடர்பான காணொளி இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
குழந்தையை பெண்ணொருவர் காப்பாற்றியுள்ளார். மகளை நீச்சல் குளத்த்தில் தள்ளிய குற்றத்திற்காக மெக்கர்த்தியை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மெக்கர்த்தி கூறுகையில், ‘அவள் 5 வாரமேயான நாய்குட்டியை நீச்சல் குளத்தில் எறிந்து விட்டாள் அது இறந்து விட்டது அவளுக்கு பாடம் புகட்டவே சிறுமியை நீச்சல் குளத்தில் எறிந்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Average Rating