சுகதேகி சிங்கத்துக்கு, தடுப்பூசி மாற்றி ஏற்றிய வைத்தியர்

Read Time:1 Minute, 49 Second

12(718)தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கங்களில் ஒன்று நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அந்த சிங்கத்துக்கு ஏற்றப்பட வேண்டிய நோய்த்தடுப்பூசியை சுகதேகியாகவுள்ள சிங்கத்துக்கு மாற்றி ஏற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தால், மிருக வைத்தியருக்கும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதை அடுத்து, அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்களில் ஒன்று சுகவீனமுற்றுள்ளது. இச்சிங்கத்துக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக சிங்கக்கூட்டுக்குச் சென்ற மிருக வைத்தியர், நோய்வாய்ப்பட்ட சிங்கத்துக்கு ஏற்ற வேண்டிய ஊசியை, மற்றைய சிங்கத்துக்கு ஏற்றியுள்ளார்.

இதனால், கோபமடைந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்கள், குறித்த வைத்தியருடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை சற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, நோய்வாய்ப்பட்ட சிங்கத்துக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மிருகக்காட்சிசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அங்கங்களை படமெடுத்த விரிவுரையாளருக்கு விளக்கமறியல்
Next post கனடாவுக்கு வெற்றி விழா பிடிக்காவிட்டால் மூடுங்கள் வாயை :இலங்கை