சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை

Read Time:2 Minute, 33 Second

questசிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, முற்பிறவியில் தன்னை கொலை செய்த கொலைகாரனை காட்டிக்கொடுத்ததுடன், தன்னை புதைத்த இடத்தையும் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

ட்ருஸ் தனி இனக்குழுவை சேர்ந்த அந்த சிறுவன் பிறக்கும்போது, அவனது தலையில் சிவந்த நிறத்தில் நீண்ட கோடு போன்ற அடையாளம் இருந்துள்ளது. அந்த இனத்தை பொறுத்த வரை அவ்வாறு தோன்றும் அடையாளம் முற்பிறவியை குறிக்கும் என்பது ஐதீகமாகும்.

அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான்.

தனது முற்பிறவி பெயரை கூறிய சிறுவன் அப்பிறவியில் கோடாரியை கொண்டு ஒருவன் தன்னை தாக்கி கொன்றதாக தெரிவித்துள்ளான். தான் தங்கியிருந்த பகுதியை அந்த சிறுவன் கூற அவனை அந்த இடத்திற்கே மக்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்ற அவன் தான் வசித்து வந்த இடத்தை காண்பித்துள்ளான். அங்கிருந்த மக்கள் அந்த இடத்தில் வசித்து வந்தவன் நான்கு வருடங்களுக்கு காணாமல் போனதாக தெரிவித்தனர்.

ஆனால் தான் கொல்லப்பட்டதாக தெரிவித்த சிறுவன், தன்னை கொன்றவனையும் அடையாளம் காட்டினான். உடனடியாக கொலைகாரனின் முகம் வெளிறிப்போனது. ஆனாலும் அவன் தான் கொலை செய்யவில்லை என்று கூறிவந்தான்.

உடனே சிறுவன் தான் கொன்று புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பித்தான். அங்கிருந்து ஒரு ஆணின் மண்டை ஓடு மற்றும் கோடாரியும் கண்டெடுக்கப்பட்டது.

கொலை குறித்து ஆதாரத்துடன் சிக்கியதால் கொலைகாரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இச்சம்பவம் சிரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலசலகூடத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு
Next post சிறுமி 5 மாத கர்ப்பம் ; இளைஞன் தலைமறைவு