சீனாவில் 7 பேரை குத்திக் கொன்ற வாலிபர்
சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்தார்கள். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சீனாவில் 7 பேரை வாலிபர் ஒருவர் குத்தி கொன்ற சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் உள்ள பிண்டிங்சன் என்ற இடத்தில் சம்பவம் நடந்துள்ளது.
வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். அவர்களை கொன்றவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் அவர் தீவிரவாதி அல்ல என்பது தெரியவந்துள்ளது. உள்ளூர் தகராறில் அவர் 7 பேரை குத்தி கொன்றுள்ளார். நேற்று சீனாவில் பள்ளி ஒன்றில் 8 சிறுவர்களை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது.
இதற்கிடையே சீனாவின் பக்கத்து நாடான தைவானில் ரெயிலில் கல்லூரி மாணவர் ஒருவர் பயணிகளை சரமாரியாக குத்தினார் இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர்.
Average Rating